No excuse me to come in...!

Gowri Welcomes you to his world of thoughts....!

Thursday, December 2, 2010

பொது கவிதைகள்

என் கண்கள் கூட தாய்மை அடைந்து விட்டது..
தன் குழந்தைகளாக..
கண்ணிரை ஈன்றவுடன்..!

பனிப்பாறையின் சிறு விரிசல்கள்..
என்னவளின் உதடுகள்..!

பிறந்த பலனை அடைந்து விட்டன..,
அவள் கூந்தல் காடேறிய
"பூக்கள்"

என் கால்களுக்கும்,கைகளுக்கும்
கண்களுக்கும்,காதுகளுக்கும்
உதடுகளுக்கும்-துணையை
என் உடலில் படைத்த ஆண்டவன்
மறந்து விட்டான் போலும்,
என் இதயத்தின் துணையை மட்டும்
அவளுக்குள் படைத்துவிட்டான்..!
நான் கூட பூனைதான்
அனுதினமும் பிடிக்கிறேன்
கணிப்பொறி எலியை..!

அதிகாலையில் ஆயிரம் பனிதுளிகளின்
அழகிய மரணம்...
கதிரவனின் வருகையால்..


கதிரவனை மறைத்த
கார்முகிலை ரசித்தபடி நடக்கிறேன்,
என்னையும் மறந்து
கதிரவனை தேடி...!

என் பேருந்து பயணம்..
10 வருடகளுக்கு முன்னால்
மரங்களை ரசிதப்படி..
10 வருடகளுக்கு பிறகு
மரங்களின் சுவடுகளை நினைத்தப்படி..


பேருந்தின் உடைந்த ஜன்னல்களின் வழியே சாரல்கள்,
நான் ரசிக்கிறேன்..,
சாரல்களை "உணர்ந்து" மட்டுமே ரசிக்கும்
பார்வையில்லா தோழர்களை..!

உலகின் கடினமான இரு செயல்கள்..

1.நாம் மற்றவரிடம் உண்மையாய் இருப்பது...!
2. மற்றவர் நம்மிடம் உண்மையாய் இருக்குமாறு இருப்பது...!

2 comments: