No excuse me to come in...!

Gowri Welcomes you to his world of thoughts....!

Thursday, December 2, 2010

பொது கவிதைகள்

என் கண்கள் கூட தாய்மை அடைந்து விட்டது..
தன் குழந்தைகளாக..
கண்ணிரை ஈன்றவுடன்..!

பனிப்பாறையின் சிறு விரிசல்கள்..
என்னவளின் உதடுகள்..!

பிறந்த பலனை அடைந்து விட்டன..,
அவள் கூந்தல் காடேறிய
"பூக்கள்"

என் கால்களுக்கும்,கைகளுக்கும்
கண்களுக்கும்,காதுகளுக்கும்
உதடுகளுக்கும்-துணையை
என் உடலில் படைத்த ஆண்டவன்
மறந்து விட்டான் போலும்,
என் இதயத்தின் துணையை மட்டும்
அவளுக்குள் படைத்துவிட்டான்..!
நான் கூட பூனைதான்
அனுதினமும் பிடிக்கிறேன்
கணிப்பொறி எலியை..!

அதிகாலையில் ஆயிரம் பனிதுளிகளின்
அழகிய மரணம்...
கதிரவனின் வருகையால்..


கதிரவனை மறைத்த
கார்முகிலை ரசித்தபடி நடக்கிறேன்,
என்னையும் மறந்து
கதிரவனை தேடி...!

என் பேருந்து பயணம்..
10 வருடகளுக்கு முன்னால்
மரங்களை ரசிதப்படி..
10 வருடகளுக்கு பிறகு
மரங்களின் சுவடுகளை நினைத்தப்படி..


பேருந்தின் உடைந்த ஜன்னல்களின் வழியே சாரல்கள்,
நான் ரசிக்கிறேன்..,
சாரல்களை "உணர்ந்து" மட்டுமே ரசிக்கும்
பார்வையில்லா தோழர்களை..!

உலகின் கடினமான இரு செயல்கள்..

1.நாம் மற்றவரிடம் உண்மையாய் இருப்பது...!
2. மற்றவர் நம்மிடம் உண்மையாய் இருக்குமாறு இருப்பது...!

காதல் கவிதைகள்

என் உயிர் அவள் தான் என்பது எனக்கு தெரியும்..,
அவளுக்கு எப்பொது தெரியும் அவள் உயிர் நான் என்றல்ல,
என் உயிர் அவள் என்று..!
--காதலை சொல்ல துடிப்பவன்.,

காதல் கொண்டவர்கள்
அழுவதில்லை..,
காதலை கொன்றவர்கள் மட்டுமே
அழுகிறார்கள்...!

ஒரு ஒரு நிமிடமும் 60 வினாடிகளை
கொண்டிருக்கவில்லை.,
அவளுடன் நான் இருந்த 60 வது தருணங்களை
கொண்டிருக்கின்றன..!
என்னை மறந்தால் மட்டுமே காலத்தை
மறப்பேன்,
காலத்தை மறந்தால் மட்டுமே அவளை
மறப்பேன்,...!

காதல் வரும் முன்பு நான்
என்னை தவிற யாரிடமும்
உண்மையாய் இருந்தது இல்லை..,
காதல் வந்த பின்பு நான்
என்னை தவிற யாரிடமும்
பொய்யாய் இருக்கவில்லை..!


அவள் செய்தவை எல்லாம் எனக்காக
என்று நம்பிய என் மனம்,
அவள் பிரிந்தது கூட எனக்காக இருக்கலாம்.
என்று மட்டும் நம்ப மறுக்கிறது...!

உன்னை மட்டும் மதிப்பவள் உன் காதலி ஆகிறாள்,
உன் உணர்வுகளையும் மதிப்பவள் உன் அன்னை ஆகிறாள்..!

கைப்பேசியின் அழுகை..
என்ன பாவம் செய்தோம்..?
காதலர்களின் வீரல் நூனியில்
அனுதினமும் மரணம் :)

ஒரு பெண்ணின் செயல்கள் எல்லாம் தனக்காக மட்டுமே
என்று நினைபவன் மட்டுமே
இந்த உலகில் செயல்பட முடியாமல் போகிறான்..,